யமுனை ஆற்றை நாறடிப்பதில் டெல்லி நம்பர் 1!
இது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மீனா எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், 'டெல்லியில் வஜிராபாத்துக்கும், ஓக்லா தொழிற்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து யமுனை ஆற்றில் மிக அதிகமான அளவில் கழிவுநீர் கலக்கிறது.
நாட்டின் மற்ற எந்த ஆறுகளிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து இந்தளவுக்கு கழிவு நீர் கலப்பதில்லை. அவ்வளவு கழிவு நீர் யமுனை ஆற்றில் கலப்பதால், அது ஒரு சாக்கடை நதியாக மாறி வருகிறது.
வஜிராபாத் கால்வாய் தொடங்கும் பகுதியிலேயே அதில் வரும் பெருமளவு ஆற்று நீரை மக்கள் பயன்பாட்டுக்காக உறிஞ்சிக் கொள்வதால் டெல்லியை வந்தடையும்போது பெரும்பாலும் சாக்கடை நீர்தான் அதில் மிஞ்சுகிறது.
யமுனை ஆற்றங்கரையோர நகரங்களில் இருந்து ஆற்றில் கலக்கும் மொத்தக் கழிவுநீரில் டெல்லியின் பங்கு 79 சதவீதம் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய ஆய்வு தெரிவித்துள்ளது. யமுனையை அசுத்தப்படுத்தும் கறுப்பு ஆடுகளில் டெல்லிதான் நம்பர் ஒன்.
ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.