
தனது பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடிய கவிஞர் வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பணமுடிப்பு வழங்கி கெளரவித்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து தனது பிறந்த நாளான ஜூலை 13-ம் தேதியை கவிஞர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார். இந்த நாளில் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் வழங்குவது அவரது வழக்கம்.
நேற்று (ஜூலை -13) வைரமுத்துவின் பிறந்த தினம். இதையொட்டி இந்த ஆண்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பு வழங்கினார் வைரமுத்து.
மாலை ட்ரஸ்ட்புரத்தில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் இதனை வழங்கினார்.
முன்னதாக காலை முதல்வர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து பிறந்தநாள் ஆசிபெற்ற வைரமுத்து, பின்னர் மெரினாவில் உள்ள கவிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். தி.நகரில் உள்ள கவியரசு கண்ணதாசன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைரமுத்து.
கவிப்பேரரசு வைரமுத்து தனது பிறந்த நாளான ஜூலை 13-ம் தேதியை கவிஞர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார். இந்த நாளில் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் வழங்குவது அவரது வழக்கம்.
நேற்று (ஜூலை -13) வைரமுத்துவின் பிறந்த தினம். இதையொட்டி இந்த ஆண்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.20 ஆயிரம் பணமுடிப்பு வழங்கினார் வைரமுத்து.
மாலை ட்ரஸ்ட்புரத்தில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் இதனை வழங்கினார்.
முன்னதாக காலை முதல்வர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து பிறந்தநாள் ஆசிபெற்ற வைரமுத்து, பின்னர் மெரினாவில் உள்ள கவிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். தி.நகரில் உள்ள கவியரசு கண்ணதாசன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைரமுத்து.










Oneindia Login