3 வயது சிறுவனுக்கு புற்று நோய் - நிதியுதவி நாடும் தந்தை

புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 13:31 [IST]
குவைத்: நாகப்பட்டணத்தைச் சேர்ந்த குவைத்தில் பணியாற்றி வரும் ஜெஹப் சாதிக் என்பவர், புற்று நோயால் பாதிக்கப்பட் தனது 3 வயது மகனுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பண வசதி இல்லாமல் நிதியுதவி கோரி நிற்கிறார்.

நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் எம். ஜெஹபர் சாதிக். புற்று நோயால் பாதிக்கப்படடுள்ள தனது 3 வயது மகனுக்கு சிகிச்சை அளிக்க பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.

இதுகுறித்து ஜெஹபர் சாதிக் கூறுகையில், எம். ஜெஹபர் சாதிக் ஆகிய நான் தற்போது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றேன்.

இப்ராஹீம் என்ற எனது மூன்று வயது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக புற்று நோய் ஏற்பட்டு திருச்சி GVN மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றேன்.

இந்நிலையில் GVN மருத்துவமனையினர் மேற் சிகிச்சைக்காக சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டார்கள்.

அவர்களின் அறிவரைப்படி நானும் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு என் பிள்ளையை அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் பல மருத்துவ சோதனைகள் செய்த பின், இறைவனின் கிருபையால் இந்நோயை குணப்படுத்தி விட முடியும் என்றும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஆனால், அவர்கள் கேட்கும் மருத்துவ தொகை என் சக்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இங்கு எனக்கு கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவுதான். அப்படியிருந்தும் ஏற்கனவே என் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளேன்.

பிள்ளையை விட பணம் பெரிதல்ல என்பதால் எனக்கிருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டையும் விற்று விட்டேன்.
இப்படிப்பட்ட சூம்நிலையில் என்னால் இவ்வளவு அதிகமான தொகையை செலுத்தி மருத்துவம் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன்.

என் பிள்ளை பூரண குணம் அடைய வேண்டும் என்றால் உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். என்னால் இயலாத இந்த நிலையால்தான் தங்கள் அமைப்பிடம் உதவி செய்யுமாறு அன்பு கோரிக்கை வைக்கின்றேன்.

என் பிள்ளையின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்துடன் எனது மகன் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ விபரங்களையும், திருச்சி மருத்துவமனை மற்றும் அடையாறு மருத்துவமனை மருத்துவ அறிக்கைகளையும் இணைத்துள்ளேன என்று கூறியுள்ளார்.

உதவக் கூடிய நல்ல உள்ளம் கொண்ட தட்ஸ்தமிழ் வாசகர்கள் ஜெஹபர் சாதிக்குக்கு உதவலாம்.

அணுக வேண்டிய முகவரி..

எம். ஜெஹபர் சாதிக்,
564 / 393, மெயின் ரோடு,
நாகூர் - 611002, நாகப்பட்டிணம் மாவட்டம்.
செல்போன் எண்: (+91) 9791775642 (சாதிக்கின் மைத்துனர் அன்சாரியின் எண்)

முகாம்: குவைத் - ID எண்: 263041505886 - செல்போன் எண்: (+965) 99180678
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST