நரசிம்மராவ், ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட தேர்தல் மன்னன்-ஸ்ரீவை. தொகுயில் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 4 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் இல்லத்தார் தெருவை சேர்ந்த நாகூர் மீரானும் ஒருவர்.
இவர் போட்டோ ஸ்டியோ மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடுவதையும் ஒரு வேலையாக செய்து வருகிறார்.
இம்முறை ஸ்ரீவைகுண்டம் மற்றும் இளையன்குடி தொகுதிகளை தேர்வு செய்த இவர் நேற்று ஸ்ரீவைண்டம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் நாகூர் மீரான் நிருபர்களிடம் கூறுகையில்,
இதுவரை 40 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். 41வது தேர்தலாக ஸ்ரீவைகுணடம் தேர்தலில் போட்டியிடுகிறேன். இளையன்குடி தொகுதியிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். முதன் முதலாக 1988ம் ஆண்டு நாகர்கோவில் லோக்சபா தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலு்ம் போட்டியிட்டேன்.
91ம் ஆண்டு ஜெயலலிதா எதிர்த்து காங்கேயம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டேன். 96ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நத்தியால் லோக்சபா தொகுதியில் நரசிம்ம ராவை எதிர்த்து போட்டியிட்டேன். 97ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாகரனை எதிர்த்துப் போட்டியிட்டேன்.
இதுபோல் 40 முறை பொது தேர்தலிலும், இடைத் தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறேன் என்றார்.