குறும்படம் மூலம் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் திட்டம் அறிமுகம்
தமிழக மக்களிடையே சிறுசேமிப்பு திட்டம், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறுசேமிப்பு துறை 36 குறும்படங்களை வெளியிட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுலவகத்தில் நடந்த குறும்பட சிடியை வெளியீட்டு கலெக்டர் விளம்பர பணியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில் திருவிழாக்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த குறும்படங்கள் ஓளிப்பரப்படும்.
2009-2010ம் நிதியாண்டில் நெல்லை மாவட்டத்தில் சிறுசேமிப்பு தொகை ரூ.332 கோடியோ 57 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படங்களை திரையிடுவதன் மூலம் 2010-2011ம் ஆண்டில் சிறுசேமிப்பு முதலீடு ரூ.400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குறும்படத்தில் இடம் பெற்றுள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் தங்களது பொருளாதார வசதியை பெருக்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.