For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்ததானம் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

Google Oneindia Tamil News

Blood
ரத்ததானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாம்.

கடந்த ஆண்டு ரத்ததானம் செய்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். சென்னையில் நடந்த மாநில அளவிலான ரத்த தான நிகழ்ச்சியின்போது இது தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 6.32 லட்சம் பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இவர்களில் 5.81 லட்சம் பேர் தாங்களாக முன்வந்து ரத்தம் கொடுத்தவர்கள் ஆவர்.

சென்னையில் ரூ. 400 கோடி செலவில் பெருநகர ரத்த வங்கியை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தற்போது மாநிலத்தில் 258 ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு நடத்துவது 83 ஆகும். மத்திய அரசுக்குச் சொந்தமானது 14, மற்ற 181ம் தனியார் ரத்த வங்கிகளாகும்.

தற்போது தொடங்கியுள்ள ரத்த தான நிகழ்ச்சியின் மூலம் 15,000 புதிய ரத்த கொடையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரே நாளில் 150 இடங்களுக்கு மேல் ரத்தம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 80 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருப்பதோ 50.5 லட்சம் யூனிட ரத்தம்தான். ரத்ததான விழிப்புணர்வு இன்னும் போதிய அளவில் நம்மிடையே இல்லாததால்தான் ரத்தப் பற்றாக்குறை இருப்பதாக நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X