For Quick Alerts
For Daily Alerts
Just In
தஞ்சையில் சோழர் கால கலைகள் குறித்த கண்காட்சி-ஸ்டாலின் தொடங்கினார்
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவையொட்டி தஞ்சையில் கோலாகலமான விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3வது நாளான இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சோழர் கால கலைகள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் சோழர் காலத்தில் செழித்தோங்கிய பல்வேறு கலைகள் குறித்த அரிய தகவல்கள், பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கான அரங்கமும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், மாநில அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, செல்வராஜ், பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments
Story first published: Friday, September 24, 2010, 16:10 [IST]