ஆடைகளில் உள்ள வியர்வைக் கறையை அகற்றுவது எப்படி?
வியர்வைக் கறையைப் போக்குகிறேன் என்ற பெயரில் குறிப்பிட்ட இடத்தில் துணியைப் போட்டு தேய், தேய் என்று தேய்த்தால் அது நூல், நூலாகக் கிளம்பிவிடும். அவ்வாறு கஷ்டப்படாமல் கறையைப் போக்க சில வழிகள்,
1. வியர்வைக் கறை படிந்த துணிகளை எழுமிச்சம் சாறு கலந்த தண்ணீர் அல்லது சோடா தண்ணீரில்10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கறையும் போகும், துணியும் நல்ல வாசனையாக இருக்கும்.
2. வியர்வைக் கறை படிந்த இடத்தை பிரஷ்ஷை வைத்து தேய்க்காமல் கையில் கசக்குவதே மேல். வியர்வையில் உள்ள உப்பு மற்றும் கெமிக்கல் துணியை லேசாக்கியிருக்கும், அப்போது பிரஷ் போட்டால் துணி கிழிந்துவிடும்.
3. வியர்வைக் கறைபடிந்த துணியை துவைத்து வெயிலில் உலர வைக்கவும். அப்போது தான் அதில் உள்ள பங்கஸ் சாகும்.
4. துணிகளை துவைத்த பிறகு சில நிமிடங்கள் துணிகளுக்கான கன்டிஷனர்களில் ஊற வைப்பது நல்லது.
5. சாயம் போகும் துணிகளை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து துவைத்தால் துணி புதிது போன்று இருக்கும்.