For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டியில் சுற்றுலாத்துறை நடத்திய படகுப்போட்டியில் பெங்களூர் தம்பதி வெற்றி

By Siva
Google Oneindia Tamil News

ஊட்டி: ஊட்டியில் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட படகுப் போட்டியில் பெங்களூர் தம்பதியர் வெற்றி பெற்றனர்.

படகுப்போட்டி

ஊட்டியில் சீசன் களை கட்டியுள்ளது. சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை ஏராளமான போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி நடந்தது.

ஆண்களுக்கான போட்டியை மாவட்ட வருவாய் அதிகாரி குப்புசாமி தொடங்கி வைத்தார். பெண்களுக்கான போட்டியை நீலகிரி மாவட்ட நீதிபதி பிரேம் குமாரும், தம்பதியர்களுக்கான போட்டியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எல்.பி.தர்மாராவும் தொடங்கி வைத்தனர்.

பரிசு பெற்றோர்

ஆண்களுக்கான போட்டியில் கோவையைச் சேர்ந்த சுந்தரும், பெண்களுக்கான போட்டியில் பட்டுகோட்டையைச் சேர்ந்த சுஜாதாவும், தம்பதியர்களுக்கான போட்டியில் பெங்களூரை சேர்ந்த சரவணக்குமார்- கல்பனா தம்பதியினரும் முதல் இடத்தைப் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.

English summary
Tourism development corporation conducted boat race in Ooty to encourage the tourists. In this, Bangalore couple have got the first prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X