மழைக்காலத்தை விட கோடை காலத்தில்தான் நமக்கேற்ற பெண்களை ஈசியாக தேர்வு செய்ய முடியுமாம். இப்படிக் கூறுகிறது ஒரு ஆய்வு. அதேபோல மழைக்காலம், குளிர்காலங்களை விட கோடை காலத்தில்தான் பெண்களை எளிதாக அணுக முடிகிறதாம்.
சோஷியல் இன்ப்ளூயன்ஸ் என்ற இதழ் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம், குளிர்காலத்தை விட வெயில் காலத்தில்தான் பெண்களிடம் எளிதாக பழகி நட்பு பிடிக்க முடிகிறது என்று இந்த ஆய்வு சொல்கிறது.
பலர் மழைக்காலத்தில் பலமுறை முயன்றும் கூட பெண்களின் நட்பை சம்பாதிக்க முடியாமல்சோர்ந்து போய் விடுகிறார்களாம். ஆனால் அவர்கள் வெயில் காலத்தில் முயற்சியைத் தொடர்ந்தால் வெற்றி கிடைக்குமாம்.


































