துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் மகளிர் தின சிறப்பு கவியரங்கம் இன்று (22.03.2013) காலை 10.30 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் உணவக கூட்ட அரங்கில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி அமைப்பாளர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு கவிதாயினி நர்கிஸ் பானு தலைமை தாங்குகிறார். துபாய் லத்திஃபா மருத்துவமனையின் டாக்டர் பர்வீன் பானு, ஸ்ரீதேவி சிங்காரவேலன் மற்றும் சித்ரா ப்ரோஸ்பர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
கவியரங்கிற்கு துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தலைமை வகிக்கிறார். ஜெயா பழனி நன்றியுரை நிகழ்த்துகிறார்.
பொற்செல்வி கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 050 251 96 93 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.










