For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஜ்மானில் தமிழ்க் கவிஞருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

அஜ்மான்: அஜ்மானில் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் தாயகம் செல்ல இருக்கும் கவிஞர் இஸ்மத்திற்கு பிரிவு உபசார நிகழ்ச்சி 06.07.2014 அன்று மாலை நடைபெற்றது.

துவக்கமாக இறைவசனங்களை ஜாவெத் அலி மௌலானா ஓதினார். ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.பி. சஹாபுதீன் தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் செய்யது அலி மௌலானா துவக்கவுரை நிகழ்த்தினார்.

மதுக்கூர் ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். அதிரை அப்துல் ரஹ்மான் முப்பதாண்டு காலத்திற்கும் மேல் அமீரகத்தில் பணிபுரிந்து விட்டு தாயகம் செல்ல இருக்கும் கவிஞர் கிளியனூர் இஸ்மத் ஆற்றி வந்த சமூக, சமுதாய, இலக்கியப் பணிகளை நினைவு கூர்ந்தார். மேலும் தம்முடன் இருப்பவர்களுக்கு அரிய பல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவற்றைத் தெரிவித்து அவர்களது வாழ்வு ஏற்றம் காண உதவி புரிந்து வந்தார் என்றார்.

ஏ.பி. சஹாபுதீன் தலைமையில் கவிஞர் கிளியனூர் இஸ்மத்தின் சேவைகளை நினைவு கூர்ந்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிளியனூர் இஸ்மத் ஏற்புரை நிகழ்த்தினார். தனக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார நிகழ்ச்சி மற்றும் நினைவுப் பரிசுக்கு நன்றி தெரிவித்ததுடன் தனது பணிகள் தாயகத்திலும் தொடரும் எனத் தெரிவித்தார்.

A farewell to Tamil poet in Ajman

முதுவை ஏ அஹமத் இம்தாதுல்லா நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அதிரை சர்புதீன், ஆழியூர் அபுல் பசர், மன்னார்குடி சேக் தாவூத், முதுவை ஹெச். ஹசன் அஹமது, முதுவை ஏ. ஜஹாங்கீர், மதுக்கூர் அமீர் அலி, மதுக்கூர் ஓ.பி.எம். பஷீர், மதுக்கூர் முஹம்மது சாதிக், அஹமது தஸ்ரிஃப், திண்டுக்கல் நூருல் ஹக், ஆழியூர் பாக்கீர், முஹம்மது, இஸ்மத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English summary
Tamil Poet Ismath was given a farewell party in Ajman as he is going to settle in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X