சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்றவருக்கு துபாயில் பாராட்டு
துபாய்: துபாய் கே கம்பனியின் சார்பில் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்ற வானொலி தொகுப்பாளர் கிருத்திகா 12.05.2014 அன்று துபாய் மால் அட்ரஸ் ஹோட்டலில் பாராட்டப்பட்டார்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ் சேனல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.
இவ்விருதுக்கு ஏற்ற நபர்களை டெரிக் ஓ பிரியன், நிறுவனர், கௌன்சலேஜ் இந்தியா, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலாளர் கே.சி. சிங் உள்ளிட்டோரைக் கொண்ட குழு தேர்வு செய்தது.
பொழுதுபோக்கு என்ற பிரிவில் அமீரகத்தின் முன்னணி வானொலி தொகுப்பாளர் கிருத்திகாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததையடுத்து அவர் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கிரித்திகா பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அஜ்மான் பகுதியில் பள்ளி ஒன்றில் நூலகம் ஏற்படுத்துவது, காலை இழந்த ஒருவருக்கு செயற்கைக் கால் வழங்கிட்டது உள்ளிட்ட பல்வேறு பணிகளைக் கூறலாம்.
சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்ற கிருத்திகா மேலும் பல விருதுகளைப் பெற்றிட பலரும் வாழ்த்தினர்.