For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்குடியில் புத்தகத் திருவிழா

Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடியில் பொது மக்கள் ஆதரவுடன் புத்தகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

காரைக்குடியில் கடந்த 14ம் தேதி முதல் புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான அனைத்துப் பதிப்பகங்களும் பங்கேற்றுள்ளன.

ஏராளமான வாசகர்கள், பெற்றோர், பிள்ளைகள் தினந்தோறும் ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். மாலையில் ஒவ்வொரு நாளும் காரைக்குடியில் இருக்கும் பள்ளிகள் கலைநிகழ்ச்சி நடத்துகின்றன.

Book festival in Karaikudi

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. பிள்ளைகள் சிறுவர் இலக்கியம் பற்றி உரையாற்றினார்கள். அனைவரும் அற்புதமாகப் பேசினர்.

இந்த போட்டிக்கு பேராசிரியர் முனைவர் செந்தமிழ்ப்பாவை, பேராசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் நடுவராக இருந்தனர். இதனையடுத்து, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

English summary
Book festival is going on in Karaikudi. This festival has attracted not only students but also others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X