துபாய் அமைப்பு நடத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி: முதல் பரிசு 4 கிராம் தங்கக்காசு
துபாய்: துபாய் தமிழர் சங்கமம் உலக அளவிலான கவிதைப் போட்டியை நடத்துகிறது.
உலகளவில் பரவிக்கிடக்கும் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காகவும் அதன் மூலம் நல்லதொரு படைப்புகளைத் தமிழ் உணர்வாளர்களுக்கு விருந்துப் படைபதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் துபாய் தமிழர் சங்கமம் அமைப்பு உலகளாவியக் கவிதைப்போட்டியை நடத்தி வருகிறது என அதன் இலக்கியப் பிரிவு செயலாளர் அதிரை கவியன்பன் கலாம் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் கவிஞர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் [email protected]
போட்டி விபரங்கள் வருமாறு,
விருப்புத் தலைப்பில் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 25.09.2014
முதல் சுற்று
விருப்புத் தலைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள். படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 23.10.2014 ஆகும்.
தலைப்பு 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்
இரண்டாம் சுற்று
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள். படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி 27.11.2014 ஆகும்.
தலைப்பு 29.11.2014 அன்று அறிவிக்கப்படும்
இறுதிச் சுற்று
இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 31.12.2014 ஆகும்.
தலைப்பு 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்
முடிவு அறிவிப்பு மற்றும் பரிசு வழங்குதல்:
பொங்கல் திருநாள் அன்று இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 10 படைப்பாளிகளிலிருந்து மூவர் மட்டுமே தேர்ந்தேடுக்கப்படுவார்கள்
முதல் பரிசு: 4 கிராம் தங்கக் காசுகள்
வழங்குபவர்: எக்ஸலன்ட் முருகேஷ் - டாக்டர் சுமதி தம்பதியினர், நிறுவனர், தமிழர் சங்கமம்
இரண்டாம் பரிசு: 2 கிராம் தங்கக் காசுகள்
வழங்குபவர்: அட்மின் கமிட்டி உறுப்பினர்கள், தொழிற்பிரிவு, தமிழர் சங்கமம்
மூன்றாம் பரிசு : 1 கிராம் தங்கக் காசு
வழங்குபவர்: கவியன்பன் கலாம், கலை இலக்கியப் பிரிவு செயலாளர், தமிழர் சங்கமம்