வாஷிங்டனில் பொங்கல் விழா: குறள் பாடிய தமிழக் குழந்தைகள்
வாஷிங்டன்: அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் வட்டாரத் தமிழ்ச் சங்கம் அதன் செயற்குழு ஆண்டு நிறைவு பெற புதிய செயற்குழு தொடங்கும் நாளாக பொங்கல் நிகழ்ச்சியை செயற்குழுவின் தலைப் பொங்கல் போல் கொண்டாடி வருகின்றது.
அதே போன்று இந்த ஆண்டுக்கான பொங்கல் நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
திருக்குறள்
பொங்கல் விழா திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படுவதால், இந்த ஆண்டு திருக்குறள் நிகழ்ச்சி ஒன்றில் ஐம்பது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
நாடகம்
திருக்குறளை மையக் கருத்தாக வைத்து ஒரு நாடகமும் நடத்தப்பட்டது. பொங்கல் நாளன்று தமிழர்கள் சிறப்பாக கோலம் வரைந்து தங்கள் இல்லங்களை அலங்கரிப்பதால், நிகழ்ச்சிகளில் வெகுசிறப்பாக கோலப்போட்டியும் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர். பாடல்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் பிறந்தநாளை பொங்கல் தினத்தன்று கொண்டாடி வந்ததால், அவரை நினைவு கூறும் வகையில் அவரது திரைப்பட பாடல்கள் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாட்டுப்புற பாட்டு
நாட்டுப்புற பாட்டுக்கு சிறுவர்கள் வேஷ்டி அணிந்தும், சிறுமியர் சேலை உடுத்தியும் அசத்தலாய் நடனம் ஆடினர்.
தமிழ் பெயர்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதன் முக்கியத்துவம் பற்றி நிகழ்ச்சியில் பேசப்பட்டது.
கோல ராணி
கோலப்போட்டியில் அழகான கோலத்தை வரைந்து முதற்பரிசை தட்டிச் சென்றவர்.
செயற்குழு
2104ம் ஆண்டுக்கான வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு இது தான்.
தேவதை நடனம்
சிறுமிகள் வெள்ளை நிற ஆடை அணிந்து கலக்கலாய் நடனம் ஆடினர்.