துபாயில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம்
துபாய்: துபாய் பி.எம்.ஐ. இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் 11.07.2014 அன்று மாலை ரமதா ஹோட்டலில் நடைபெற்றது.
பி.எம்.ஐ. இன்டர்நேஷனல் தலைமை செயல் அலுவலர் உல்ஃப் தலைமை வகித்தார். பி.எம்.ஐ. இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் மருத்துவ உபயோகப் பொருட்களின் பயன்கள் குறித்து விவரித்தார். ரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எளிதில் தீர்க்க இந்த பொருட்கள் பயன்படுவதாக குறிப்பிட்டார். பலர் தங்களது உடல் எடையினை 15 முதல் 20 கிலோ வரை குறைக்கவும் இப்பொருட்கள் உதவுகின்றது. இதன் மூலம் ஆரோக்கியமாக ஒவ்வொரு மனிதனும் வாழ உதவுகிறது என குறிப்பிட்டார்.
புதிய தலைமை செயல் அலுவலராக ரசூல் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், அனைவரது ஒத்துழைப்பினையும் தருமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிஷ்னு அதிகாரி, சக்ரவர்த்தி, ஜஹாங்கீர் அக்பர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற லிஃப்ட் நிறுவன பொது மேலாளர் ஹசன் அஹமது குடும்பத்தினர் பி.எம்.ஐ. இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மருத்துவ உப பொருட்கள் ஒவ்வொரு மனிதனும் மிக ஆரோக்ய நிலையினை அடைவதற்கு உதவியாய் இருந்து வருகிறது. இதனை பயன்படுத்துவன் மூலம் ஒவ்வொருவரும் புதிய அத்தியாயத்தை தங்களது வாழ்வில் தொடர முடியும் என குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் விபரம் அறிய 050 51 96 433 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.