For Daily Alerts
Just In
தேவதையின் தரிசனம்...
-வீ. இளவழுதி
காற்றில் உந்தன்
குரல் கேட்டு
கற்பனையில் உயிர்
வளர்த்து - உன்னை
காணும் தருணத்திற்காக
வரம் வேண்டி...
இறைவன் சன்னதியில்
காத்திருக்க.....
வரம் தரும் அம்மனாக
வந்தாய் என்னருகில்...
வார்த்தைகளில் வர்ணம்பூசி
வரவழைத்தவன்- உன்னை
கண்ட தருணத்தில்
வாயடைத்து நிற்கிறேன்- பேச
வார்த்தைகளின்றி!....
-வீ. இளவழுதி ([email protected])
Comments
Story first published: Monday, March 10, 2008, 12:17 [IST]