For Daily Alerts
Just In
மித்ர பேதம்–நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
அந்த மூன்று மாடுகளும் ஒற்றுமையாக இருந்ததால் அந்த சிங்கம் நினைத்தது நிறைவேறவில்லை.
இதனை அறிந்த தந்திரக்கார நரி ஒன்று காளைகளை பிரிக்க முடிவு செய்து தனது விளையாட்டை தொடங்கியது.
தனித்தனியாக ஒவ்வொரு காளையிடமும் சென்று இல்லாததும் பொல்லததும் சொல்லி மாடுகளிடையே சண்டை மூட்டியது.
சில தினங்களிலேயே நரியும், சிங்கமும் எதிர்பார்த்தது நடந்தது. காளைகள் தனித்தனியே திசைக்கொன்றாக பிரிந்து இரை தேடச் சென்றன.
இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த சிங்கம் காளைகளை அடித்துக் கொன்று தின்றது.
இதுதான் நட்பை கெடுத்து பகை உண்டாக்கி அழிப்பது. ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை இந்த மித்ர பேதம் தொடரத்தான் செய்கிறது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற அருமையான தத்துவத்தையே இந்த காளைகள் பிரிவும், நரியின் தந்திரமும் நமக்கு விளக்குகிறது.
Comments
English summary
There was once a Lion who came across three bulls: a red bull, a white bull and a black bull. The Lion tried to attack them but because they were strong together he decided to bide his time. He befriended the bulls and told them he was protecting them.
Story first published: Wednesday, June 22, 2011, 9:10 [IST]