தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும் பேராசிரியர் பெ. மாதையன், பெரியார் பல்கலைக்கழகம்
|
|
மே 10, 2005 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Rajasthan Royals: 33 / 0, 5 Overs
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.
More Headlines
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia Login![]() ![]() My Place My Voice
A.Kaliyaperumal onபிக்சிங்.. சிக்கிய வின்து சொன்னது.. சீனிவாசன் மருகமன்தான் என்னை சென்னைக்கு கூப்பிட்டாரு Nada Ratnasamy onமலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அரசு முடிவு Suresh Venkat on3 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிக்ஸிங்கில் தொடர்பு... விண்டு சிங் தகவல் கபாலி onகுருநாத்துக்கு தொடர்பு இருந்தால்..சென்னை அணி நீக்கம்? பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஜினாமா? Nagarajan K onமுதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் மேயராகும் 17 வயதுப் பெண்: ம.பி
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Rajasthan Royals: 33 / 0, 5 Overs
Live Scorecard
| Ball by Ball
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.
Scorecard
| Ball by Ball
|
கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005


0. ஏறத்தாழ நானூறு ஆண்டுகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் ஆவணமாக விளங்கும் சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வுஇலக்கியத்தளத்தில் மட்டுமே ஆராயப்பட்ட நிலை மாறி அவற்றைக் கல்வெட்டு தொல்லியல் சான்றுகள், நாணயவியல்ஆதாரங்கள், மொழியியல் சான்றுகள், இந்திய வரலாற்றியல் சான்றுகள் எனும் பல ஆதாரங்களின் அடிப்படையில் பரவலானதளத்தில் ஆராயும் சூழல்கள் இன்று உருவாகியுள்ளன. இந்த ஆய்வுப் போக்குகள் பண்டைய தமிழ்ச் சதாயத்தின்வெளிப்படுத்தப்படாத பரிமாணங்களை வெளிக்கொணரவும் சங்க இலக்கியத்தின் பழமை வாய்ந்த காலத்தை நிர்ணயிக்கவும்பேரளவில் உதவுகின்றன. இந்த ஆய்வுத் தடத்தில் புதியதொரு பரிமாணத்தை உருவாக்குவதாக வெளிவந்துள்ள ஐராவதம்மகாதேவனின் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய விரிவான நூல் சங்க இலக்கியச் சமுதாயத்தின் மறுபக்கத்தை (சங்க இலக்கியம்வெளிப்படுத்தாத சமுதாயத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்து மதம், எழுத்து, அரசு, சமுதாயம் எனும் பல்வேறுநிலைகளிலும் பல புதிய பார்வைகளை முன்வைத்துள்ளது. இந்த நூலின் இந்தப் பார்வையோடு சங்க இலக்கியத்தை இணைத்துநோக்குவதை இந்த ஆய்வு அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தமிழ் எழுத்து முறைக்கு வந்தது கி.மு.3 நூற்றாண்டிலேயேயென மகாதேவன் கூறுவது முக்கியமானதாகின்றது. இதுவொருமுக்கியமான விடயமாகும். அதாவது சங்க இலக்கியங்கள் இந்த எழுத்துரு வளர்ச்சிக்குப் பிற்காலத்திலேயே தோன்றியிருத்தல்வேண்டும். இக்கட்டத்திலேயே இப்பிராமி எழுத்துரு நிலை கி.பி.4ஆம் நூற்றாண்டில் முடிவுறுகின்றது என்ற இவ்வாசிரியரின்முடிவு முக்கியமானதாகின்றது (2004:127) என ஐராவதம் மகாதேவனின் காலவரையறையை ஏற்று சங்க வரலாற்றை,இலக்கிய உருவாக்கத்தை ஆராயும் கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்து மேலாய்விற்கும் மறுஆய்விற்கும் உட்படுத்தப்படவேண்டியதாக உள்ளது.
எனும் பாட்டில் கொற்கைப்பொருநன் எனவும் நெடுஞ்செழியன் எனவும் குறிப்பிடப்பெறும் மன்னன் இவனாக இருக்க மிகுதியும்வாய்ப்புள்ளது. இந்தப் பாடலைப் பாடியவர் மதுரைப் பேராலவாயார். இவரின் காலத்தை கே.என்.சிவராஜபிள்ளை(1932) கி.பி.1 - 25 என்கின்றார். இந்த மன்னன் வேறு இரு மன்னர்களுடன் கூடல் போரில் ஈடுபட்ட குறிப்பு பரணர் பாடியஅகநானூற்றுப்பாடலில் (116) இடம் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரின் காலவரையறையில் உள்ளகாலவேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாது இந்தச் செழியனை மகாதேவன் சுட்டும் நெடுஞ்செழியனாகக் கருதலாம்.
பிராமிக் கல்வெட்டுகள் சமணர்க்கு மன்னர்கள் செய்த கொடைகள் பற்றிப் பேசுகின்றன. செங்காயபன் எனும் மூத்தசமணத்துறவிக்கு இளஞ்சேரல் இரும்பொறை அரியணையேறியபோது கற்படுக்கை அமைத்துக்கொடுக்கப்பட்டதைப் புகலூர்கல்வெட்டு குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார் மகாதேவன் (ப.117). இது சேரமன்னர்களின் சமணச் சார்பைக் காட்டும்அதேவேளையில் சங்க இலக்கியங்கள் இரும்பொறை மரபினரின் வைதீகச் செல்வாக்கைப் பலபடப் பேசுகின்றன. இவன் தந்தைபெருஞ்சேரலிரும்பொறை பற்றிய பதிற்றுப்பத்துப் பாடல்
""தமிழ் வழங்கிய பகுதிகளில் மாத்திரம், இந்தத் தமிழ்பிராமி எழுத்துரு முறைமை காணப்படுகின்றது. இதுவொரு முக்கியவரலாற்றுத் தடயமாகும். அதாவது பிராமி எழுத்துரு மூலம் எழுதப்பட வேண்டிய அளவிற்கு தமிழ்மொழிச் செல்வாக்குவலுவுள்ள ஒன்றாக விளங்கியிருத்தல் வேண்டும்"" (2004:125) எனும் காத்த்திகேசு சிவத்தம்பியின் கூற்று எழுத்து வழக்கிற்குத்தமிழைக் கொண்டுவர வேண்டிய ஒரு சமுதாயத் தேவை இருந்ததை வெளிப்படுத்துகின்றது. இந்தக் காலக்கட்டத்திற்குமுன்பே குறியீடுகள் எண்ண வெளிப்பாட்டிற்கான ஊடகங்களாகப் பயன்பட்டதை கா.ராஜன் எடுத்துக்காட்டியுள்ளார்.(2004:47). ஆக எழுதும் முறை என்பது தமிழ் பிராமிக்கு முன்பே இருந்துள்ளதும் தமிழ் பிராமி எழுத்துமுறைக்குப்பின் தமிழ்எழுத்துமுறை தொடர்ந்து சீர்ப்பட்டு வளர்ந்து வந்து வட்டெழுத்தில் நிலைபெற்றுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கி. மு.இரண்டு முதல் கி.பி. 4 வரையில் கிடைக்கும் மட்பாண்ட எழுத்துப் பொறிப்புகளால் பொதுமக்கள் மத்தியிலும் எழுத்துப்பண்பாடு இருந்தமை உறுதிப்படுகின்றது.








Oneindia Login