For Daily Alerts
Just In
உன்னையே தந்துபோகும் குளிர்..
செவியோரம் சொல்லிப்போன தென்றல்
துளி துளியாய் வந்துவிழும் மழை
சாரலென உன் அருகாமயை அழைத்துவரும்
சில்வண்டுகளின் சப்தம் உன்
கொலுசின் சப்தத்தை சொல்லிப்போகும்
தென்னை ஓலைகளிடையே வந்துவிழும் நிலவும்
மென் தொடுகையாய்
உன்னையே தந்துபோகும் குளிரும்..
நட்சத்திர கனவுகளில் தொலைந்துபோன
என் சித்தம் நீயற்ற வெளிகளில்
எரிக்கும் நிஜமுரைத்து
பாலையில் தள்ளிப்போகும்...என்றாலும்
ஞாபகங்கள் அலைபோல
எப்போதும் ஓய்வதில்லை...
-ரிஷி சேது ([email protected])
Comments
Story first published: Sunday, September 13, 2009, 13:21 [IST]