என் தமிழகம் என்னிடம் விளையாடி பார்த்து விட்டதே! - அமெரிக்காவில் கமல் வருத்தம்
அமெரிக்காவின் ப்ரீமாண்ட் பகுதியில் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு நேரடியாக தியேட்டருக்கு வந்தார் கமல்ஹாஸன்.
அப்போது ரசிகர்களிடம் அவர் பேசுகையில், "என் தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியீடு சில காலத்துக்கு நிறுத்தபட்டுள்ளது.
என் தமிழ் நாட்டிலேயே எனக்கு இந்த நிலையா என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் (அமெரிக்க வாழ் தமிழர்கள்). நானும் வெளியில்தான் உள்ளேன் இப்போது.
என் தமிழகம் என்னை இப்படி விளையாடி பார்த்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனால் இது எல்லாம் மாறும். நான் செய்திருப்பதில் தவறேதும் இல்லை.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன்.. நான் அவர்களுக்கு நினைவிலும் செயலிலும் எந்த தீங்கும் செய்யவில்லை.
இந்தப் படத்தை பார்ப்பவர்கள் இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். நாம் எந்த சமூகத்திற்கு எதிரான வெறுப்பையும் பரப்ப கூடாது. மத பிரச்சினைக்காக இந்தியா பல முறை துண்டாடப்பட்டுள்ளது. இந்த படமாகட்டும் ஹே ராமாக இருக்கட்டும் அதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். அன்புதான் அவசிமானது. நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை. அது இந்த பட பாடலிலே உள்ளது," என்றார்.
-சதுக்கபூதம்