சோவியத் யூனியன்
1922ம் ஆண்டு டிசம்பரில் சோவியத் யூனியனை ரஷ்யா உருவாக்கியபோது உக்ரைனை அதில் இணைத்தது ரஷ்யா. இதையடுத்து தனது படைகளை அனுப்பிய சோவியத் யூனியன் போலந்து வசம் இருந்த பல உக்ரைன் பகுதிகளையும் கைப்பற்றியது.
ஆனாலும் மேற்கு உக்ரைனின் ஒரு பகுதி போலந்து வசமே மீண்டும் தரப்பட்டது. புகோவினா பகுதியை ருமேனியாவும், கார்பதியன் ருதேனியா பகுதியை அமெரிக்கா ஆதரவுடன் செக்கோஸ்லோவாக்கியாவும் ஆக்கிரமித்தன.
இதற்கிடையே சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைனை விடுவிக்க போலந்து நாட்டில் Organisation of Ukrainian Nationalists (OUN) என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்புக்கும் சோவியத் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக உக்ரைன் மொழி மீதான தடையை சோவியத் யூனியன் நீக்கியது. உக்ரைன் இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தந்தது. மருத்துவ சேவைகள், கல்வி, சமூகப் பாதுகாப்பையும் உக்ரைன் மக்களுக்கு சோவியத் வழங்கியது.
இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. உக்ரைன் தொழிலாளர்கள், கீழ் மட்ட மக்களிடையே சோவியத் யூனியனுக்கு ஆதரவு பெருகியது. சோவியத் யூனியனின் தொழில் புரட்சியால் உக்ரைனின் பொருளாதாரமும் பெரும் வளர்ச்சி கண்டது.