ஜெர்மனி- ரஷ்யா மோதல்
இந் நிலையில் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனுக்குள் ஹிட்லரின் ஜெர்மன் ராணுவம் 1941ம் ஆண்டில் புகுந்தது. உக்ரைனின் கிவ் நகரைப் பிடிக்க முயன்ற ஜெர்மன் படைகளை சோவியத் படைகள் கடுமையாக எதிர்த்தன. அவர்களுடன் உக்ரைன் மக்களும் இணைந்து போராடினர்.
ஆனால், Organisation of Ukrainian Nationalists அமைப்பினர் ஜெர்மன் படைகளுடன் இணைந்து சோவியத் படைகளை எதிர்த்தன. இந்த நகரை ஜெர்மனியிடம் இருந்து காக்க 6 லட்சம் சோவியத் படைகளும் உக்ரைன் மக்களும் உயிர்ப் பலி கொடுத்தனர்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் உக்ரைன் பெரும் சேதத்துக்கு உள்ளானது. அதன் நகர்கள் பெரும் அழிவை சந்தித்தன. ஹிட்லர் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்தவுடன் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியன் பெரும் பலம் அடைந்தது. வேகவேகமாக பல நாடுகளை தனது நாட்டுடன் இணைத்தது.
உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு ரஷ்யர்களின் எண்ணிக்கையை செயற்கையாக அதிகரித்தது சோவியத் யூனியன்.