நான் சொன்ன அதே காரணம்...!!!
அது ஒரு கல்லூரி ஹாஸ்டல். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தங்கியிருந்த அந்த ஹாஸ்டலுக்கு செல்கிறார் ஒரு பழைய மாணவர்.
அங்கு தான் முன்பு தங்கியிருந்த அறைக்குப் போகிறார். அங்கு தற்போது தங்கியிருக்கும் மாணவனுடன் பேசுகிறார்...
(முன்னாள் மாணவர் கதவைத் தட்ட, கதவைத் திறக்கிறார் தற்போது அங்கே தங்கி இருக்கும் மாணவர்...)..
இனி உரையாடல்...
நான் முன்னாள் மாணவர்....
முதியவர்: நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அறையில் தங்கி தான் படித்தேன்...
மாணவர்: ஓ... அப்படியா?
மாற்றமில்லை....
முதியவர் : இந்த அறையில் ஒன்றுமே மாறவில்லையே, அப்படியே இருக்கிறது...!!!
மாணவர் : ஓ... அப்படியா?
அப்படியே இருக்கின்றன....
முதியவர் : அதே பழைய கட்டில், அதே துருப்பிடித்த ஜன்னல், உடைந்த நாற்காலி...
மாணவர் : ம்ம்ம்....
கட்டிலுக்கு கீழே இளம்பெண்....
கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்து அதிர்ச்சியாகிறார் முதியவர். காரணம் அங்கே ஒரு இளம்பெண் ஒளிந்து கொண்டிருக்கிறாள். இப்போது முதல்முறையாக மாணவன் வாய் திறக்கிறான்....
இது கூட மாறலியா..?
மாணவர் : ஹிஹி...ஹி... தப்பா நினைச்சுக்காதீங்க. இவ என்னோட சொந்தக்காரப் பொண்ணுதான். காதுல போட்டுருந்த கம்மலைக் காணோம்னு கட்டிலுக்கு கீழே தேடிட்டு இருக்கா...?
(தாத்தாவின் மைன்ட் வாய்ஸ்) : நான் சொன்ன அதே காரணம்...!!!