Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'காட்டுவாசம் போதும்.. நாட்டுக்கு போகணும் சேட்டா!'

Posted by:
Published: Saturday, July 21, 2012, 14:13 [IST]

சமீப காலமாக இந்த இயக்குநரை மேடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது. அட முன்பெல்லாம் உம்மென்றுதான் இருப்பார். இப்போது ஜம்மென்று பேசவும் செய்கிறார்.

இந்த மாற்றங்கள் மேடையில் மட்டுமில்லையாம்.. .தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடத்தானாம்.

ரொம்ப வித்தியாசமான தலைப்புகளில் படமெடுத்து ரசிகர்களைக் கொக்கி போட்டு பிடித்த அந்த இயக்குநர், இப்போது தான் அறிமுகப்படுத்தும் புது நடிகையை அடுத்த சில ஆண்டுகளுக்கு எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டாராம்.

தன் படம் முடியும் வரை மட்டுமல்ல, முடிந்த பிறகும்கூட, அடுத்து எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நான்தான் டிசைட் பண்ணுவேன் என அடம்பிடிக்கிறாராம்.

'மீறி கையெழுத்திட்டால், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல பாத்துக்கோ' என்று மிரட்டலாக எச்சரித்து வைத்திருக்கிறாராம்.

'சரி, வேற படம் பண்ணல. ஆனால் இந்த காட்டுவாசம் போதும்.. நாட்டுக்கு போகணும் சேட்டா!' என்று கேட்டாலும் விடுவதாக இல்லையாம்.

மீறிப் போய்ப் பார்த்தால்தான் என்ன.... எத்தனை நாளைக்கு இவரது 'காட்டு இம்சையை' தாங்குவது என சேச்சிகளிடம் யோசனை கேட்டு வருகிறாராம்!

English summary
In Kollywood, the recent gossip is the debutant heroine's efforts to come out of her director's custody.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter