Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'புதிய பாதை'க்கு மாறிய கண்ணழகி ..!

Posted by:
Published: Thursday, November 22, 2012, 14:14 [IST]

சென்னை: அவர் மீனாவுக்கு முன்பு கண்ணழகியாக திகழ்ந்தவர். தனது க்யூட் அழகால் சினிமாவில் தனி இடம் பிடித்தவர். புதிய பாதை போட்டவரோடு காதலில் இணைந்தார். இரு குழந்தைகளுக்கு தாயான பின்னர் புதிதாய் ஒரு குழந்தையையும் தத்தெடுத்தனர்.

இயக்குநர் கம் ஹீரோவான தனது கணவரின் படங்கள் வெற்றிபெற திருப்பதிக்கு சென்று மொட்டை எல்லாம் போட்டார் அந்த காதல் மனைவி. கடைசியில் சின்னத்திரையில் நடிக்கிறேன் பேர்வழி என்று டிவி ஹீரோவோடு தனியாக குடும்பம் நடத்தத் தொடங்கினார். இதைப் பார்த்து அதிர்ந்து போன இயக்குநர் கம் ஹீரோ தன் மகள் மற்றும் பிள்ளைகளுடன் தனியாகப் பிரிந்து போய் விட்டார்.

இது போதாதா.. வசதியாகப் போய் விட்டது அந்த கண்ணழகிக்கு...டிவி நடிகருடன் பகிரங்கமாக வலம் வரத் தொடங்கினார். இந்த வில்லங்க உறவு கோலிவுட்டில் சில காலம் பேசப்பட்டு பின்னர் அடங்கியும் போனது.

இப்போது புதிய பூதம் கிளம்பியிருகிறதாம். டிவி ஹீரோ கழற்றிவிடப்பட்டு புதிதாக தெலுங்கு ஹீரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறாராம். நடிகையின் இந்தப் புதிய பாதை பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம். ஏன் இந்தப் பிரிவு, எதற்காக இந்தப் புதிய உறவு என்று பேச ஆரம்பித்துள்ளனராம்.

இந்த புதிய பாதை எவ்வளவு தூரம் போகுமோ என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுப்புகள் கிளை பரப்பி பரவத் தொடங்கியுள்ளனவாம்.

English summary
The TV actress, who has acted in many movies, has dropped her partner and started another relationship with a Telugu actor, sources say.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs