Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நண்பேண்டா நடிகர்களால் மனம் நொந்த சாண்டல்... இனி, பஞ்ச் பேசக் கூடாது என முடிவு
சென்னை: சாண்டல் நடிகரின் காமெடியாலேயே கூட சில முக்கிய நடிகளின் படங்கள் சில கல்லாக் கட்டியது. அந்தளவிற்கு நாயகனின் 'நண்பண்டே' கேரக்டரில் வந்து அதகளப் படுத்தியிருந்தார் நடிகர்.
இதனால், சமீபத்திய படங்களில் ஹீரோக்களை விட அதிக முக்கியத்துவம் காமெடி நடிகரின் போர்ஷனுக்குக் கொடுக்கப் பட்டது. இந்நிலையில் வழக்கம் போல், 'எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்பது என தானும் நாயகனாக உருவெடுத்தார் காமெடி. அதன்படி, வேறு மொழியில் வந்த படத்தை 'புல்' ஆயுதமாக மாற்றி வசூலித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தில் பல இடங்களில் லாஜிக் அடி வாங்கினாலும், படம் நன்றாகத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்படத்தால் தனது 'மச்சி' நடிகர்கள் பலரது மீது கோபத்தில் இருக்கிறாராம் காமெடி.
காரணம் படத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று டண்டணக்கா தமிழில் ஆங்காங்கே வசனம் பேசும். அதற்கு டப்பிங் பேச முதலில் மச்சி நடிகர்களைத் தான் அணுகினாராம் சாண்டல். ஆனால், அவர்கள் கையை விரித்து விட கடைசியில் தான் இந்த வாய்ஸ் உறுதியானதாம்.
இதனால், படத்தில் பல்பு வாங்குவது போலவே நிஜத்திலும் சோகமாகிவிட்டாராம் சாண்டல். இனி தன் படங்களில் எவனுக்காகவும் பன்ச் பேச மாட்டேன்' என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறாராம்.