Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தன் வீட்டு வேலையாட்களுக்கு புது வீடுகள்... அடுத்த மாதம் அன்பளிப்பாகத் தருகிறார் அஜீத்!
சென்னை: அஜீத்தின் கொடையுள்ளம் பற்றி தினசரி ஏதாவது ஒரு செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.
இன்றைய செய்தி... அவர் தனது வீட்டு வேலையாட்களுக்கு புதிய வீடு கட்டித் தந்திருப்பதுதான்.
இந்த செய்தி ஏற்கெனவே வெளியான ஒன்றுதான். இப்போது வருவது அதன் ஃபாலோ அப்!
தன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி 5 கிரவுண்ட் நிலம் வாங்கி, அதை பத்தாகப் பிரித்து, தன் வீட்டில் பணியாற்றுபவர்களுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்து வைத்தார் அல்லவா...
அந்த இடத்தில் தன் மனைவி ஷாலினி மேற்பார்வையில் 10 வீடுகளைக் கட்டியுள்ளார் அஜீத்.
தேவையான வசதிகளுடன் அந்த வீட்டைக் கட்டிய அஜீத், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அறைகலன்களைக் கூட தன் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார்.
கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்புக்காக மலேஷியா போயிருக்கும் அஜீத், ஷூட்டிங் முடிந்து திரும்பியதும், புதுமனைப் புகுவிழா நடத்தி, தன் பணியாளர்கள் பத்து பேரிடமும் சாவியைத் தரவிருக்கிறார்.
ஏற்கெனவே தன்னிடம் வேலைப் பார்த்த 25 பேருக்கு தலா 1 கிரவுண்டில் கேளம்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இப்போது அவர் பாணியில் அஜீத்!