Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் ரசிகர் மன்றம் துவங்குகிறார் அஜீத்!
சென்னை: அஜீத் குமார் மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்குவது குறித்து ஆலோசித்து வருகிறாராம்.
பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளது. நடிகர்கள் ரசிகர் மன்றத்தினரை தங்கள் படம் ரிலீஸாகும் போது ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டுவது, தியேட்டர்கள் முன்பு ராட்சத கட் அவுட் வைப்பது, அந்த கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வைத்துள்ளனர்.
இந்த ரசிகர்கள் மன்றங்களே தங்களின் பலம் என்று நடிகர்கள் கருதுகிறார்கள்.
அஜீத்
ரசிகர் மன்றங்களை பலம் என்று கருதும் நடிகர்கள் மத்தியில் அஜீத் வித்தியாசமானவர். ரசிகர் மன்றத்திற்குள் அரசியல் நுழைவதை கண்ட அவர் உடனடியாக மன்றங்களை கலைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ரசிகர்கள்
அஜீத் ரசிகர் மன்றங்களை கலைத்தபோதிலும் அவரது ரசிகர்கள் அவர் படங்கள் ரிலீஸாகும்போது தங்களின் சொந்த செலவில் போஸ்டர் அடிப்பது, கட் அவுட் வைப்பது என்று செய்து வருகின்றனர்.
நெருடல்
மன்றத்தை கலைத்த போதிலும் ரசிகர்களின் தொடர் ஆதரவு அஜீத்துக்கு ஒரு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. மன்றத்தை கலைத்தும் என் மீது இவ்வளவு பாசமா என்று அஜீத் நெகிழ்ந்துள்ளார்.
மீண்டும் ரசிகர் மன்றம்
ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை பார்த்து அஜீத் மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம்.
விதிமுறைகள்
மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்கினால் உறுப்பினர்களுக்கு பல்வேறு கன்டிஷன்களை போடப்போகிறாராம் அஜீத். அதாவது மன்றம் நற்பணிகளை செய்ய வேண்டுமே தவிர எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது, அரசியல் கட்சி கொடிகளுடன் மன்ற கொடியை சேர்த்து பறக்க விடக்கூடாது உள்ளிட்ட கன்டிஷன்களை போடவிருக்கிறாராம் அஜீத்.