Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டுக்கு மருந்தடிக்க வந்தவருக்கு 'காபி வித் அன்பளிப்பு' தந்த அஜீத்!
தான் வீட்டிலிருக்கும்போது யார் வந்தாலும் அவர்களை அஜீத் உபசரிக்கும் விதமே அலாதியானது.
இப்போது சொல்லப் போகும் சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.
அது ஒரு தீபாவளி சமயம். அஜீத் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க வந்திருக்கிறார் ஒரு தொழிலாளி. அப்போது அஜீத் வீட்டிலிருந்திருக்கிறார். மருந்தடிக்கும் தொழிலாளி வந்திருப்பதை அறிந்ததும், தானே காப்பி போட்டு எடுத்து வந்து அந்தத் தொழிலாளிக்குக் கொடுத்தாராம்.
அஜீத்தின் இந்தச் செயல் மிகுந்த வியப்பையும், நெகிழ்ச்சியையும் தந்துவிட்டது மருந்தடிப்பவருக்கு. வேலைகள் முடிந்து கிளம்ப எத்தனித்தவரைத் தடுத்து நிறுத்திய அஜீத், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் மருந்தடிப்பவரை நிற்கச் சொன்னவர், உள்ளே போய் பட்டாசுகள், இனிப்பு என தீபாவளிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கையில் ரொக்கப் பரிசும் கொடுத்து திக்குமுக்காட வைத்தாராம்.
இந்த விஷயத்தை வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம் என அஜீத் வழக்கமான கட்டளையும் போட்டுதான் அவரை அனுப்பினாராம். ஆனால் சில மாதங்கள் கழித்து இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.