Don't Miss!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- News இனி ஈசியா லோயர் பெர்த் கிடைக்கும்.. நாமலே சீட்டை செலக்ட் பண்ணிக்கலாம்! ரயில்களில் வரும் சூப்பர் வசதி
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தெலுங்கு படத்தில் நடிக்க கதை கேட்கும் தனுஷ்
திருப்பதி: தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நேரடி தமிழ்படங்களில் நடிக்க உள்ளாராம். இதற்காக கதை கேட்டு வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் நேற்று காலை வி.ஜ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது என்றார்.
2015ல் ஷமிதாப் ரிலீஸ்
இந்தியில் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடித்ததை எனது வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். அவரும் நானும் இணைந்து நடித்த ‘ஷமிதாப்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
நேரடி தெலுங்கு படத்தில்
தமிழில் 3 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கு படத்தில் நடிக்க நல்ல கதையை தேடி வருகிறேன். அப்படி கிடைத்தால் தெலுங்கு படத்தில் நேரடியாக நடிப்பேன். இவ்வாறு தனுஷ் கூறினார்.
பக்தர்கள் கூட்டம்
திருப்பதியில் ஞாயிறன்று விடுமுறை தினம் என்பதால்நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை 48,341 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
20 மணிநேர காத்திருப்பு
அதன் பின்பும் வைகுண்டம் கியூ காம்ளக்சில் 27 கம்பார்ட்மெண்டில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
கால்நடையாக வந்த பக்தர்கள் 7 மணி நேரம் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தலைமுடி காணிக்கை, தங்கும் அறைக்காக பக்தர்கள் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்றனர்.