twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! - சந்தானம்

    By Shankar
    |

    சென்னை: முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் யாரும் எனக்குத் தேவையில்லை. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறத உள்ளங்கள் இருந்தா போதும், என்றார் நடிகர் சந்தானம், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

    கெட்ட நேரம் சொல்லிக் கொண்டு வருவதில்லை... அது அவரவர் நாக்கிலேயே எப்போதும் உட்கார்ந்திருக்கிறது, என்பார்கள். இது எல்லாருக்கும் பொருந்தும், அதுவும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவே வேண்டாம்!

    I dont need leading heroes or directors, says Santhanam

    சந்தானத்துக்கு கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் ஆரம்பமாகப் போகிறது என்பதுதான் நேற்று அவர் பேச்சைக் கேட்ட அத்தனை பேரின் கமெண்ட்ஸும்.

    அவர் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தேவி தியேட்டரில் நடந்தது.

    ஏதோ ரசிகர் மன்ற மாநாடு மாதிரி ஆட்களைக் குவித்திருந்தார் சந்தானம். தெலுங்கு தேசத்திலிருந்து இயக்குநர் ராஜமவுலியையும் அழைத்திருந்தார். இவர் எடுத்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்தான் இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

    திரையில் சின்ன வேடத்தில் வந்தாலும், பேசியே கொல்லும் ஸ்ரீநாத்-தான் இந்தப் படத்தின் இயக்குநர். மைக்கைப் பிடித்தவர் நான்கைந்து படங்களுக்குச் சேர்த்தே பேசிவிட்டுத்தான் இறங்கினார்!

    அடுத்துப் பேசிய சந்தானம், " எவ்ளோ காலத்துக்குதான் ஹீரோவோட லவ்வுக்கு உதவி பண்ற மாதிரியே நடிக்கிறது... அதான் இப்போ நானே ஹீரோவா களமிறங்கிட்டேன். என் ரசிகர்கள் என்னை நீண்ட நாட்களாக 'தலைவா.. தனி ஹீரோவா நடிங்க'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வரும் வரை காத்திருந்தேன். இப்போ அது வந்துருச்சி... என் ரசிகர்களுக்காகத்தான் இந்தப் படம் பண்றேன்.

    என் ஏரியால அடிக்கடி பசங்க வந்து, மச்சான் அவன் என்னைக் கலாய்ச்சிட்டான்.. வாடா அவனை ஒரு கை பாக்கலாம்னு கூப்பிடுவாங்க.

    நான் சொல்வேன், 'டேய் உங்களுக்கு தில் இருந்தா தனியா போய் மோதுங்கடா.. அடுத்தவனை எதுக்கு இழுக்கறே'-ன்னு.

    நான் என்னை மட்டுமே இந்த சினிமால நம்பியிருக்கேன். அப்படி நம்பித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இந்தப் படத்துல இருக்கற ஒரு டெக்னீஷியன் பேரு கூட தயாரிப்பாளருக்குத் தெரியாது. அவங்ககிட்ட நான் சொன்னதே, என்னை மட்டும் நம்புங்க.. இந்தப் படத்தை முடிச்சித் தர்றேன்-ன்னு சொன்னேன். பெரிய பெரிய டெக்னீஷியன்களை நம்பவில்லை. நான் என்னை மட்டுமே நம்பி இறங்கியிருக்கேன்.

    இந்த விழாவுக்குக் கூட முன்னணி ஹீரோக்களையோ இயக்குநர்களையோ நான் கூப்பிடவில்லை. அவர்களைவிடட, நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்கதான் எனக்கு வேணும். அவர்களைத்தான் இங்கே அழைச்சிருக்கேன்," என்று பேசிக் கொண்டே போனார்!

    English summary
    Actor Santhanam says that he never needs leading actors or technicians for his movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X