Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காதல் காட்சிக்கு டூப் போடாமல் சண்டை காட்சிக்கு மட்டும் டூப் எதற்கு: அஜீத்
சென்னை: காதல் காட்சிக்கு யாரும் டூப் போடாதபோது சண்டை காட்சிக்கு மட்டும் டூப் போடுவதில் நியாயம் இல்லை என்று அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.
சண்டை காட்சிகளில் டூப் போட விரும்பாதவர் அஜீத். எத்தனை ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடிப்பவர். அப்படி அவர் வீரம் படத்திலும் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ரயிலில் வரும் ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சி குறித்து சிவா கூறுகையில்,
ரயில் காட்சி
ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு கையால் சண்டை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் கம்பிகளை பிடித்து அஜீத் நகர வேண்டும். இந்த காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் போடலாம் என்று அஜீத்திடம் தெரிவித்தேன். ஆனால் அவர் டூப் போட மறுத்துவிட்டார்.
பார்த்துவிடலாம்
ரயில் காட்சியில் அப்படி என்ன தான் ரிஸ்க் இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என்று களம் இறங்கிய அஜீத் சிறப்பாக அந்த காட்சியில் நடித்தார். ஆனால் அவர் நடித்து முடிக்கும் வரை எங்களுக்கு எல்லாம் பயமாக இருந்தது.
ஏன் இப்படி?
ஏன் இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறீர்கள் என்று அஜீத்தை கேட்டேன். அதற்கு அவர், நான் தான் ஹீரோ. அதனால் நான் தான் வில்லனை அடிக்க வேண்டுமே தவிர டூப் நடிகரை வைத்து அடிக்க வைக்கக் கூடாது என்றார் அஜீத்.
காதலுக்கு
காதலியை கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் ஹீரோ தான் நடிக்கிறார். அப்படி இருக்கையில் சண்டை காட்சிகளில் டூப் நடிகரை நடிக்க வைப்பதில் நியாயம் இல்லையே. அதனால் தான் எதுவாக இருந்தாலும் நானே நடித்துவிடலாம் என்று முடிவு செய்தேன் என்று அஜீத் என்னிடம் தெரிவித்தார் என்றார் சிவா.