Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு விஜய் அண்ணா இடம் தான் வேண்டும்: சொல்கிறார் ஜெய்
சென்னை: எனக்கு திரை உலகில் விஜய் அண்ணாவின் இடம் வேண்டும் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக முன்னேறி வருபவர் நடிகர் ஜெய். முதலில் நடிகை அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் பிறகு நஸ்ரியாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானதும் அந்த கிசுகிசுக்கள் அடங்கின.
இந்நிலையில் அவர் நடித்த வடகறி படம் அண்மையில் ரிலீஸானது.
மகிழ்ச்சி
வடகறி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் ஜெய். இதில் அவர் தன்னுடன் சுப்பிரமணியபுரம் படத்தில் ஜோடியாக நடித்த சுவாதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
அஜீத், விஜய்
அஜீத், விஜய், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் வரிசையில் சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா ஆகியோர் டாப் இடங்களில் உள்ளனர் என்றார் ஜெய்.
நானும்
சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா போன்று நானும் முதல் 5 நடிகர்களில் ஒருவராக வேண்டும் என்று ஜெய் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
விஜய் அண்ணா
நான் எந்த இடத்தில் தற்போது உள்ளேன் என்று வியக்கிறேன். பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விஜய் அண்ணாவின் இடம் தான் வேண்டும் என்று ஜெய் கூறினார்.
பகவதி
2002ம் ஆண்டில் விஜய், ரீமா சென் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்யின் பாசக்கார தம்பியாக நடித்திருந்தார் ஜெய். ஜெய்க்கு தமிழில் முதல் படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.