Don't Miss!
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
திருமணம் வேண்டாம்… தனிமையே போதும்: சல்மான்கான் திடீர் முடிவு
மும்பை: திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் கிடையாது. தனிமையைதான் நான் விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானிற்கு 48 வயதாகிறது. ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனாகைப் வரை பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர் சல்மான் கான். இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் பற்றி பலமுறை பல்வேறு விதமாக பதில் கூறியுள்ளார். குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியம் என்றும் ஒருமுறை சல்மான்கான் கூறியுள்ளார்.
பெண்தோழிகள் வேண்டாம்
சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சல்மான் ''எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது என்று அறிவித்துள்ளார்.
தனிமையிலே இனிமை
நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன்.
தொந்தரவு இல்லை
தனிமையாக வசிப்பதால், செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை.
பெண்களை மதிக்கிறேன்
நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை. யாராவது என் வாழ்வில் குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீதான மதிப்பை இனியும் தொடருவேன்" என்று கூறினார்.