Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அழியும் சினிமா.. காப்பாற்ற எந்த வழியையும் கண்டுபிடிக்கவில்லையே!- பார்த்திபன்
சென்னை: சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த வழியும் கண்டுபிக்கவில்லையே என நடிகர் - இயக்குநர் பார்த்திபன் ஆதங்கப்பட்டார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகான நடித்துள்ள 'சலீம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியதிலிருந்து...
"அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு மெஷினை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த மெஷின் மூலம் ஒரு 10 ஆயிரம் பேரைப் பிடித்தார்கள்.
அதேபோல் ஜப்பானில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு அது 8 ஆயிரம் பேரை பிடித்துக் கொடுத்தது. ரஷ்யாவில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு 1000 பேரை பிடித்துக் கொடுத்தது.
கடைசியாக இந்தியாவில் கொண்டுவந்து அந்த மெஷினை வைத்தார்கள். இங்கு அந்த மெஷினையே திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.
அதுதான் இங்கு சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். அதைத் திருட்டு விசிடி போட்டு சினிமாவை காலி பண்ணுகிறார்கள்.
சினிமாவை அழிப்பதற்குண்டான ஏகப்பட்ட வழிகளை இங்கே உள்ளவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே தவிர, சினிமாவை காப்பாற்ற யாரும் எந்த வழியையும் கண்டுபிடிப்பதில்லை. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு காணப்படுமா என்று தெரியவில்லை," என்றார்.