twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருவல்லிக்கேணி கோயில் தங்கத் தேரைப் பார்வையிட்ட ரஜினிகாந்த்!

    By Shankar
    |

    சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி. அங்கு தயாராகியுள்ள தங்கத் தேரைப் பார்வையிட்டார்.

    ரஜினி நடித்த 'கோச்சடையான்' பட வேலைகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. இந்தப் படத்தில் தன் பங்கை முடித்துவிட்ட ரஜினி , வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    Rajini

    வரும் 25-ம் தேதி இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கிறது.

    இந்த நிலையில் ராகவேந்திரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் ரஜினி. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இந்தக் கோயிலுக்கு வருகிறார். முன்பெல்லாம் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வந்தச ரஜினி, தான் வருவதை அறிந்து கூடும் கூட்டத்தைக் கண்டு, வருவதைத் தவிர்த்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் வாசலில் காரில் வந்து இறங்கினார். பின்னர் கோவிலுக்குள் நுழைந்த அவரை ஊழியர்கள் வரவேற்றனர்.

    ராகவேந்திரா கோவிலுக்கு புதிதாக தங்கதேர் செய்யப்பட்டு உள்ளது. அந்த தேரை சிறிது நேரம் சுற்றி பார்த்தார். பின்னர் கருவறைக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.

    அரை மணி நேரம் கோயிலில் இருந்த அவர், பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

    English summary
    Superstar Rajinikanth had a peaceful dharshan at Sri Ragavendra Temple, Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X