Don't Miss!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்
திருப்பதி திருமலை கோயிலுக்குச் சென்ற நடிகர் சித்தார்த், தலையை மொட்டை போட்டுக் கொண்டார்.
தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இரண்டு படங்களுமே முடிந்துவிட்டன. விரைவில் வெளி வரவிருக்கின்றன.
இந்த நிலையில் திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்றார் சித்தார்த். முதலில் மொட்டை போட்டுக் கொண்டார். பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.
அடுத்து வரவிருக்கும் தனது ஜிகர்தண்டா படம் வெற்றி பெற கடவுளிடம் வேண்டிக் கொண்டார். சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதியில் சாமி கும்பிட்டார்கள்.
"திருமலைக்கு வந்து பிரார்த்தனை செய்வது எப்போதுமே மனசுக்கு நிறைவான விஷயம். இந்த முறை ஜிகர்தண்டா படம் வெற்றி பெற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்," என்றார்.
சித்தார்த்துக்கு தெலுங்கில் பொம்மரிலு படத்துக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம் கூட அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.