Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பூச்சாண்டி... தலைப்பை ஏற்பாரா சூர்யா?
ஆனால் இந்தத் தலைப்பு உறுதியானதல்ல... இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சூர்யா - லிங்குசாமியின் அஞ்சான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்படத்துக்கு கடந்த மாதமே பூஜையும் போட்டுவிட்டார்கள்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல நடிகைகள் பெயர் அடிபட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு 'பூச்சாண்டி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
பூச்சாண்டி என்ற தலைப்பை தன் தம்பி பிரேம்ஜிக்காக முன்பு பதிவு செய்து, அதை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார் வெங்கட் பிரபு. ஆனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கினார்.
தலைப்பு விஷயத்தில் மிகவும் கவணமாக இருப்பவர் சூர்யா. அவர் பூச்சாண்டி என்ற தலைப்பை ஏற்பாரா என்பது கேள்விக்குரியது.