twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    40வது பிறந்த நாளில் ரசிகர்களிடம் விஜய் எதிர்பார்ப்பது இதுதானாம்…!

    By Siva
    |

    சென்னை: இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடிய இளைய தளபதி விஜய் ரசிகர்களிடம் தான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    Vijay's expectations from his fans

    என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். வழக்கமாக நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைய தினத்தை ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் பகுதியில் என் பிறந்த நாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணியுங்கள். கண்தானம், ரத்ததானம் செய்யுங்கள், பெண்களுக்கு தையல் மிஷின், மாணவர்களுக்கு லேப்டாப், ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

    உங்களின் இந்த சேவை தான் எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கும். உங்களின் இந்த தொண்டு மேலும் பல மடங்கு உயர வேண்டும். அதற்கு நீங்கள் பொருளாதார நிலையில் உயர வேண்டும். அப்போது தான் இந்த சேவைகள் சாத்தியமாகும்.

    நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் உறுதியோடும், உண்மையோடும் உழையுங்கள். கண்டிப்பாக வெற்றியை பெறுவீர்கள். உங்களின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் விலையுண்டு, நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற உணர்வை பெறுவேன். உண்மையோடு உழையுங்கள், உயர்ந்த இடத்தை பிடியுங்கள். இதுவே நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் எனது பிறந்த நாள் பரிசாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vijay has released a statement expressing his expectations from his fans on his 40th birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X