Don't Miss!
- News ராமநாதபுரத்தில் சிக்கல்.. மதுரை எய்ம்ஸ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டமா? இயக்குனர் விளக்கம்
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்
திருப்பதி: பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மகனின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.
பாலிவுட் நடிகர் விவேக்ஓபராய் ஏழுமலையான தரிசிப்பதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். சாமி தரிசனம் செய்த அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், என்னுடைய மகனுக்கு தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக நான் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தேன் என்றார்.
நடிகர் விவேக்ஓபராயை பார்ப்பதற்காக கோவில் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் விவேக்ஓபராய்க்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல முயன்றனர்.
அப்போது தேவஸ்தான பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.