twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஏன் ஹீரோ ஆனேன்?: சொல்கிறார் சந்தானம்

    By Siva
    |

    சென்னை: தான் ஹீரோ அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்தானம்.

    சந்தானம் சிங்கிள் ஹீரோவாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஜிம்முக்கு சென்று உடல் எடையை எல்லாம் குறைத்துள்ளாராம்.

    இந்நிலையில் தான் ஹீரோவாக வேண்டிய காரணம் குறித்து சந்தானம் கூறுகையில்,

    ஹீரோ

    ஹீரோ

    ஹீரோவாக நடிக்க வேண்டும், பஞ்ச் வசனம் பேச வேண்டும், பத்து பேரை பறக்க விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

    காமெடியன்

    காமெடியன்

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஒரு நகைச்சுவை நடிகர் தான் ஹீரோவாக நடிக்க முடியும். அந்த நபர் அப்பாவியாகவும் அதே சமயம் ஹீரோயிசம் செய்து கைத்தட்டல்களையும் வாங்க வேண்டும்.

    நானே

    நானே

    இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பெரிய ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தை புதுமுகங்கள் தாங்க முடியாது. அதனால் தான் நானே ஹீரோவாக நடிப்பது என்று முடிவு செய்தேன்.

    பார்த்து பார்த்து

    பார்த்து பார்த்து

    இந்த படத்தில் கூடுதலாக காமெடி செய்து ஹீரோவாகவில்லை. நான் என்ன செய்தாலும் அதை மக்கள் ரசிப்பார்கள் என்றும் நினைக்கவில்லை. திரைக்கதையில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். படத்தில் ஏராளமான ஸ்வாரஸ்யமான விஷயங்கள் உள்ளன என்றார் சந்தானம்.

    English summary
    Comedian Santhanam has taken hero avatar in the movie Vallavanuku Pullum Ayudham. He has explained as to what made him to take this role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X