Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோடி பதவி ஏற்பு விழா... ஏன் தவிர்த்தார் ரஜினி?
தனது நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற மிக முக்கிய விழாவுக்கு அரசு விருந்தினராகப் போயிருக்க வேண்டிய ரஜினி கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார்.
காரணங்கள் இரண்டு...
முதல் காரணம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்ப, அவரும் வருவேன் என்று ஒப்புக் கொண்டதுதான்.
இலங்கை தொடர்பான விஷயங்களில் எப்போதுமே தெளிவான முடிவை எடுத்து வருகிறார் ரஜினி.
2009-ல் ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்த ரஜினி, தமிழர் மண்ணை தமிழருக்கே தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இறுதிப் போர் முடிந்து, கொழும்பில் ஐஃபா திரைப்பட விழா நடந்தபோது, அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ரஜினியை அழைக்க முடிவு செய்து, அழைப்பிதழ் தர வீட்டுக்கு வர அப்பாயின்ட்மென்ட் கேட்டார் சென்னையிலிருந்த இலங்கைத் தூதர்.
விஷயத்தைக் கேட்டுக் கொண்ட ரஜினி, "நான் விழாவுக்கு நிச்சயம் வர மாட்டேன். எதற்காக அழைப்பிதழ் தர சிரமப்படுகிறீர்கள். வர வேண்டாம்," என ரஜினி தரப்பில் சொல்லப்பட்டது.
இந்த விஷயம் மீடியா மூலம் வெளியில் தெரிய வர, அதன் பிறகு பெரும் போராட்டமே சென்னையிலும் மும்பையிலும் நடந்தது. அமிதாப், ஐஸ்வர்யா ராய் கூட அங்கு செல்வதைத் தவிர்த்துவிட்டனர்.
எனவே பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வருகிறார் என்பது தெரிந்ததுமே, தான் அந்த விழாவுக்குப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார் ரஜினி.
இரண்டாவது காரணம்...
ராஜபக்சேவை நரேந்திர மோடி அழைத்ததைக் கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த அதிரடியான கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கை வெளியான போது ரஜினி மைசூரில்தான் இருந்தார். அறிக்கை வெளியானதுமே, தனது நண்பர்களிடம், நான் விழாவுக்குப் போகப் போவதில்லை என்று கூறிவிட்டாராம்.
இருந்தாலும் மத்திய அரசின் அழைப்பு இது. தம்மை மதித்து அனுப்பப்பட்ட இந்த அழைப்பை மதிக்கும் விதத்திலேயே தன் மகள் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தாராம். அவரும் விழாவில் பங்கேற்றுவிட்டு, விருந்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினாராம்.
"தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என எப்போதும் தமிழ் மக்களைக் குறிப்பிடும் ரஜினி, தமிழர் உணர்வுகளுக்கு மாறாக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. எனவே ராஜபக்சே விருந்தினராக வரும் ஒரு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று கனவு கூடக் காண வேண்டாம்," என்றார் நம்மிடம் பேசிய ரஜினியின் நண்பர் ஒருவர்.
அது போதும்!