Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் மாடு மேய்க்க தான் லாயக்கு என்று கிண்டல் அடித்தார்கள்: கமல் ஹாஸன்
சென்னை: நான் மாடு மேய்க்க தான் போகிறேன் என்று எனது குடும்பத்தாரும், நண்பர்களும் என்னை கிண்டல் அடித்தனர் என்று பத்மபூஷன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே நேரம் நடிகர் கமல் ஹாஸன் கவலையில் இருந்தார். காரணம் அவர் நடித்த விஸ்வரூபம் படம் ரிலீஸாவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் கவலை அடைந்த அவர் படத்தை ரிலீஸ் செய்யவிடவில்லை என்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று தெரிவித்தார்.
மகிழ்ச்சி
கடந்த ஆண்டு இதே நேரம் கவலையில் இருந்த கமல் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷனை வழங்கி கௌரவம் செய்தது தான் அவரின் மகிழ்ச்சிக்கு காரணம்.
நாடு
நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கடந்த ஆண்டு தெரிவித்த கமல் தற்போது நாட்டை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நாடும் தன்னை பார்த்து பெருமைப்படுகிறது என்று தனக்கு தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அலுவலகம்
சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் மாடிப்படி கமலுக்கு சென்டிமென்ட்டானது. அந்த படியில் அமர்ந்து தான் சிறுவன் கமல் திரையுலகில் தன்னால் நுழைய முடியுமா என்று யோசித்தான். கமல் தனது பெற்றோரை இழந்தபோது அந்த படியில் அமர்ந்து தான் அழுதார். அதே படியில் இருந்து தான் அவர் விஸ்வரூபம் பிரச்சனை பற்றி கடந்த ஆண்டு பேட்டி கொடுத்தார்.
மாடு மேய்க்க
சென்னை மவுண்ட் ரோட்டை வெறிக்க வெறிக்கப் பார்த்த பையனாக இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். திரையுலகில் சாதிக்க விரும்பிய நான் இறுதியில் மாடு தான் மேய்க்கப் போகிறேன் என்று என் குடும்பத்தாரும், நண்பர்களும் கிண்டல் அடித்தனர் என்றார் கமல்.
அம்மா
ஒழுங்காக படிக்கவில்லை என்றால் மாடு மேய்க்க தான் வேண்டும் என்று என் அம்மா என்னை கண்டித்தார்கள் என்று கமல் கூறினார்.
விஸ்வரூபம் 2
ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும். அதன் பிறகு போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை துவங்கி சில மாதங்களில் படத்தை ரிலீஸ் செய்வோம் என்றார் கமல்.