வாய்ப்புக்காக அலையும் நடிகையல்ல நான். எந்த நடிகரின் சிபாரிசும் எனக்குத் தேவையில்லை என்றார் நடிகை பூனம் பாஜ்வா.
சென்னையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை பூனம் பாஜ்வா கூறியதாவது:
"எனக்கு அதிகமாக பட வாய்ப்புகள் இல்லாததால், வீட்டில் படுத்து தூங்கி குண்டாகி விட்டேன். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
பட வாய்ப்புகள் வரும்போது வரட்டும். வாய்ப்புகளுக்காக, நான் அலைய மாட்டேன். எந்த நடிகரின் சிபாரிசும் எனக்கு தேவையில்லை. இதுவரை நான் அப்படி யார் சிபாரிசையும் நாடியதுமில்லை.
எனக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்று கருதினால், இயக்குநர்கள் என்னை தேடி வருவார்கள். அப்படிப்பட்ட படங்களில் நடித்தால் போதும். இல்லாவிட்டால் சும்மா இருந்தாலும் தப்பில்லை", என்றார்.



















