மக்கள் தீர்ப்பை கேலி செய்வதா? - குஷ்புவுக்கு நடிகை விந்தியா கண்டனம்

சனிக்கிழமை, மே 14, 2011, 14:11 [IST]
திமுக தோற்றது மக்களுக்குக் கிடைத்த தோல்வி என குஷ்பு கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை விந்தியா.

சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தார். நடிகை விந்தியா அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில் இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் வந்த தோல்வி இது, என்று கூறினார்.

இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை.

இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா....

எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள்.

நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார்.

இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்றார்.
English summary
ADMK campaigner Actress Vindhya condemned actress Kushboo for criticising the assembly election 2011 verdict.
User Comments
Araaviine R-Araavine 16 May 2011 12:57 am
இவள் இன்னுமா அடங்கலை ,யார் அங்கே இவளைக் கொண்டுபோய் பெரிய ர பொ -------பிரபு தேவாவிடம் விடுங்கள் அடங்கிடுவாள் .அவன், அது அப்படி ரொம்ப சக்தி வாய்ந்தது .
vijay kumar 15 May 2011 10:35 am
கோவை மாவட்டத்தில் மின்சாரத்தால் மிக பெரிய பாதிப்பு . பகலில் மூன்று மணி நேரம் மின்சார வெட்டால் சிறு தொழில்கள் நசிந்து கொண்டு இருக்கின்றன.கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்த முடியாமல் ஊரை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். சிறு முதலாளிகளாய் இருந்தவர்கள் இனி பெரும் முதலாளிகளில் காலில் விழ வேண்டியது தான். ஐயா 24 மணி நேரம் மின்சாரம் வேண்டாம். 8 மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து தாருங்கள். சிறு தொழில்கள் நன்றாக இருந்தால் மட்டுமே விலைவாசி ஓரளவாவது கட்டுபாட்டில் இருக்கும்.
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST