
பிரபல இந்தி நடிகை வித்யாபாலன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தி டர்ட்டி பிச்சர் படத்தின் மூலம் சில்க் ஆக நடித்து தமிழ் ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் இந்தி நடிகை வித்யாபாலன். டர்ட்டி பிக்சர் படம் வெற்றி பெற்றதை கொண்டாடவும், ஓய்விற்காகவும் வித்யாபாலனும், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் சித்தார்த்ராய் கபூரும் நியூசிலாந்து சென்றனர்.
அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கிய அவர்கள் பிறகு அங்கிருந்து குயீன்ஸ் ஸ்டஷனுக்கு புறப்பட்டனர். அப்போது திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்தன. இதில் வித்யாபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாராம். அவர் தங்கி இருந்த இடங்களும் சேதமடைந்தன.
கிறிஸ்ட் சர்ச்சில் இருந்து வித்யாபாலன் புறப்பட்ட சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வித்யாபாலன், சித்தார்த், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் இருவருக்கும் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இருவரின் பெற்றோரும்.
நல்லவேளையாப் போச்சு போங்க...!
தி டர்ட்டி பிச்சர் படத்தின் மூலம் சில்க் ஆக நடித்து தமிழ் ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் இந்தி நடிகை வித்யாபாலன். டர்ட்டி பிக்சர் படம் வெற்றி பெற்றதை கொண்டாடவும், ஓய்விற்காகவும் வித்யாபாலனும், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் சித்தார்த்ராய் கபூரும் நியூசிலாந்து சென்றனர்.
அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கிய அவர்கள் பிறகு அங்கிருந்து குயீன்ஸ் ஸ்டஷனுக்கு புறப்பட்டனர். அப்போது திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்தன. இதில் வித்யாபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாராம். அவர் தங்கி இருந்த இடங்களும் சேதமடைந்தன.
கிறிஸ்ட் சர்ச்சில் இருந்து வித்யாபாலன் புறப்பட்ட சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வித்யாபாலன், சித்தார்த், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் இருவருக்கும் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இருவரின் பெற்றோரும்.
நல்லவேளையாப் போச்சு போங்க...!












