இயக்குநர் சுந்தர் சியைவிட, நடிகர் சுந்தர் சியைத்தான் அஞ்சலிக்கு முதலில் தெரியும். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ஆயுதம் செய்வோம்.
அதுவரை குடும்ப குத்துவிளக்காக வந்து போன அஞ்சலி, இந்தப் படத்தில்தான் செம க்ளாமர் காட்டி நடித்தார்.
ஒரு காட்சியில் கண்ணாடி முன்னால் ஒட்டுத் துணி இல்லாமல் அவர் நிற்பதுபோலவும், அதை சுந்தர் சி பார்த்து மிரள்வது போலவும் காட்சி வைத்திருந்தார்கள்.
என்ன இவ்வளவு கவர்ச்சி?
ஆனால் இதற்காக முகம் சுளிக்கவில்லை அஞ்சலி. ரொம்ப சந்தோஷமாக நடித்திருப்பார். என்ன இவ்வளவு கவர்ச்சி? என்று கேட்டபோது, நான் கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு உங்ககிட்ட சொன்னேனா, என திருப்பிக் கேட்டாராம் ஒரு புகைப்படக்காரரிடம்.
கலகலப்பு
நடிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த சுந்தர், தன் படத்தில் முதலில் நாயகி வா3ய்ப்பு தந்தது அஞ்சலிக்குதான். படம் கலகலப்பு. அஞ்சலியின் தாராள மனசை ஏராளமாய் பயன்படுத்திக் கொண்டார் இந்தப் படத்தில். கூட ஓவியாவையும் உரித்த கோழியாக்கிக் காட்டினார்.
மதகஜராஜா
இப்போது மூன்றாவது முறையாக அஞ்சலியை தன் படத்தில் நாயகியாக்கியுள்ளார் சுந்தர். அது மதகஜராஜா.
இதுவரை காட்டியதெல்லாம் ஒண்ணுமே இல்லை எனும் அளவுக்கு ஏகக் கவர்ச்சி காட்டியுள்ளாராம் இந்தப் படத்தில் அஞ்சலி.
அடுத்த படம் உனக்குதான்!
இதைப் பார்த்து குளிர்ந்து போன விஷால், தனது அடுத்த படத்துக்கும் தயாராக இருக்கும்படி அஞ்சலியிடம் கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
Story first published: Monday, February 18, 2013, 15:48 [IST]
English summary
Actress Anjali is always show extra glamour in Sundar C's movies right from his Ayutham Seivom.