Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காஸ்ட்யூம் டிசைனர் ஆனார் 'கருத்தம்மா' மகேஸ்வரி
கருத்தம்மா புகழ் மகேஸ்வரி சீரியலில் நடித்த நேரம் போக மணப்பெண், மணமகன்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியை செய்து வருகிறார்.
நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் மகேஸ்வரி. தமிழில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், மன்னவரு சின்னவரு, சுயம்வரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமா டூ சீரியல்
பின்னர் திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டிலான மகேஸ்வரி, சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த மை நேம் இஸ் மங்கம்மா காமெடி சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனது.
ஜெயாடிவி சீரியல்
மகேஸ்வரி தற்போது ஜெயாடிவியில் அதே கண்கள் திகில் தொடரில் நடித்து வருகிறார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மாதத்தில் இரண்டு வாரங்கள் சென்னை வந்து நடித்துக் கொடுக்கிறார்.
சென்னையில் தாய்வீடு
மகேஸ்வரியின் தாய் வீடு சென்னையில் இருப்பதால் அங்கு தங்கியிருந்து சீரியலில் நடித்து வருகிறார்.
காஸ்ட்யூம் டிசைனர்
மகேஸ்வரி ஒரு காஸ்ட்யூம் டிசைனர். சில படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இப்போது மஹி ஐயப்பன் என்ற பெயரில் ஹைதராபாத், மற்றும் மும்பையில் டிசைனிங் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
மணப்பெண் ஆடைகள்
பணக்கார வீட்டு திருமணங்களுக்கு மணமகன், மணமகளுக்கு உடைகளை டிசைன் செய்து தரும் நிறுவனம் இது. சீரியலில் நடித்த நேரம்போக மீதி நேரங்களில் டிசைனிங் நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறாம்.